Published : 23 Mar 2024 05:45 AM
Last Updated : 23 Mar 2024 05:45 AM

திருநெல்வேலிக்கு இன்று சிறப்பு ரயில்

சென்னை: பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக சென்னை எழும்பூர் - திருநெல்வேலி இடையே இன்று சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. தென்மாவட்ட ரயில்களில் கூட்டம் அதிகரித்து வருகிறது. பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிப்பதற்காக தெற்கு ரயில்வே நடவடிக்கை எடுத்துவருகிறது.

அதன்படி, சென்னை எழும்பூர் -திருநெல்வேலி இடையே இன்று (23-ம் தேதி) சிறப்புரயில் (வண்டி எண்.06051) இயக்கப்படுகிறது. இந்த ரயில், எழும்பூரில் இருந்துஇரவு 11.45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 11.15 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.

மறுமார்க்கத்தில், இந்த ரயில் (06052) வரும் 25-ம் தேதி இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 10.05 மணிக்கு சென்னை எழும்பூர் வந்தடையும். இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x