Published : 19 Mar 2024 06:18 AM
Last Updated : 19 Mar 2024 06:18 AM

4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தம்: ரயில்வே வாரியம் ஒப்புதல்

சென்னை: சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில் உட்பட 4 விரைவு ரயில்களுக்கு சோதனை அடிப்படையில் கூடுதல் நிறுத்தம் வழங்கி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.

தெற்கு ரயில்வேயில் முக்கிய வழித்தடங்களில் ஓடும் விரைவு ரயில்களுக்கு பயணிகளின் தேவைஅடிப்படையில் கூடுதல் நிறுத்தங்கள் வழங்கப்படுவது வழக்கம். பயணிகளின் வரவேற்பை பொறுத்து இது நீட்டிக்கப்படும்.

இந்நிலையில் சென்னை எழும்பூர் - கொல்லம் விரைவு ரயில் உட்பட 4 விரைவு ரயில்களுக்கு கூடுதல் நிறுத்தங்களை வழங்கி ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது. அதன் விவரம்:

சென்னை எழும்பூர் - கொல்லத்துக்கு இயக்கப்படும் விரைவு ரயில்உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 7.52 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். மறு மார்க்கமாக, கொல்லம் - சென்னைஎழும்பூர் விரைவு ரயில் உளுந்தூர்பேட்டை ரயில் நிலையத்தில் இரவு 11.03 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளது.

சென்னை எழும்பூர் - திருச்செந்தூர் விரைவு ரயில் குத்தாலம் ரயில் நிலையத்தில் இரவு 9.02 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். மறு மார்க்கமாக, திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் ரயில் குத்தாலத்தில் அதிகாலை 4.33 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும். இந்த நிறுத்தம் அறிவிப்பும் அமலுக்கு வந்துள்ளது.

மேலும், சென்னை எழும்பூர் -திருச்செந்தூருக்கு இயக்கப்படும் விரைவு ரயில், குத்தாலம் ரயில்நிலையத்தில் ஏப்.10-ம் தேதியிலிருந்து நேரம் மாற்றப்பட்டு, இரவு 9.21 மணிக்கு ஒரு நிமிடம் நின்று செல்லும்.

இதுதவிர, மயிலாடுதுறை - செங்கோட்டை விரைவு ரயில், விழுப்புரம் - திண்டுக்கல் விரைவு ரயில்ஆகிய ரயில்கள் இரு மார்க்கமாகவும் வடமதுரை ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்தத் தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x