Published : 02 Mar 2024 06:17 AM
Last Updated : 02 Mar 2024 06:17 AM

மெட்ரோ ரயில்களில் பிப்ரவரி மாதம் 86.15 லட்சம் பேர் பயணம்

சென்னை: பிப்ரவரி மாதத்தில் 86.15 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். சென்னை மெட்ரோ ரயிலில் கடந்த ஜனவரி மாதத்தைவிட பிப்ரவரி மாதத்தில் 1 லட்சத்து 51 ஆயிரத்து 624 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளதாகவும், மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிகம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் மேலும் தெரிவித்துள்ளதாவது; கடந்த ஜன.1-ம் தேதி முதல் 31-ம் தேதி வரை மொத்தம் 84 லட்சத்து 63 ஆயிரத்து 384 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

பிப்.1-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை மொத்தம் 86 லட்சத்து 15 ஆயிரத்து 8 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். அதிகபட்சமாக பிப்.9-ம் தேதி ஒரேநாளில் 3 லட்சத்து 26 ஆயிரத்து 786 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், பயணிகளுக்கு க்யுஆர் குறியீடு, பயணச் சீட்டு, பயண அட்டைகள், வாட்ஸ்-அப் டிக்கெட், பேடிஎம் செயலி மற்றும் போன் பே போன்ற அனைத்து வகையாக பயணச் சீட்டுகளுக்கும் 20 சதவீதம் கட்டணத் தள்ளுபடி வழங்குகிறது என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x