Published : 28 Jan 2024 06:42 AM
Last Updated : 28 Jan 2024 06:42 AM
சென்னை: பயணிகள் வசதிக்காக, சென்னை - கன்னியாகுமரி, சென்னை -கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
சென்னை எழும்பூரில் இருந்து ஜன. 29-ம் தேதி மதியம் 1 மணிக்கு சிறப்பு ரயில் (06042) புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 2.45 மணிக்கு கன்னியாகுமரியை அடையும்.
இதுபோல, கன்னியாகுமரியில் இருந்து ஜன.28-ம் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் (06042)புறப்பட்டு, மறுநாள் காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரை வந்தடையும். இந்த ரயில் தாம்பரம், செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் ஆகிய ரயில் நிலைங்களில் நின்று செல்லும்.
சென்னை சென்ட்ரலில் இருந்து ஜன.29-ம் தேதி மதியம் 1.45 மணிக்குசிறப்பு ரயில் (06044) புறப்பட்டு, அதே நாள் இரவு 11.05 மணிக்கு கோயம்புத்தூரை சென்றடையும்.
கோயம்புத்தூரில் இருந்து ஜன.28-ம் தேதி இரவு 11.30 மணிக்குசிறப்பு ரயில் (06043) புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும். இந்த ரயில் பெரம்பூர், அரக்கோணம், காட்பாடி ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கி உள்ளது. இந்த தகவல் தெற்கு ரயில்வே செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT