Published : 12 Dec 2023 04:00 AM
Last Updated : 12 Dec 2023 04:00 AM
கோவை: காசி தமிழ் சங்கமத்துக்காக கோவை - வாரணாசி இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: காசி தமிழ் சங்கமத்துக்காக இயக்கப்படும் கோவை - வாரணாசி இடையிலான சிறப்பு ரயில் ( எண்: 06105 ), வரும் 19-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, வரும் 21-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசி சென்றடையும்.
மேலும், வாரணாசி - கோவை இடையிலான சிறப்பு ரயில் (எண்:06106), வரும் 24-ம் தேதி இரவு 11.20 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்பட்டு, வரும் 27-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும். கோவை - வாரணாசி இடையிலான சிறப்பு ரயில் (எண்: 06111), வரும் 25-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, வரும் 27-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு வாரணாசி சென்றடையும்.
இது தவிர, வாரணாசி - கோவை இடையிலான சிறப்பு ரயில் (எண்:06112), வரும் 30-ம் தேதி இரவு 11.20 மணிக்கு வாரணாசியில் இருந்து புறப்பட்டு, வரும் 2024 ஜனவரி 2-ம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும். கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT