Published : 28 Nov 2023 04:00 AM
Last Updated : 28 Nov 2023 04:00 AM

கோவை - சென்னை சென்ட்ரல் இடையே இன்று முதல் வந்தே பாரத் ரயில்கள் இயக்கம்

கோவை: கோவை - சென்னை சென்ட்ரல் இடையே நவ. 28-ம் தேதி ( இன்று ) முதல் 2024 ஜனவரி 30-ம் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சேலம் கோட்ட ரயில்வே அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: பயணிகள் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், கோவை - சென்னை சென்ட்ரல் இடையே வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

அதன்படி, சென்னை சென்ட்ரல் - கோவை இடையிலான வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்:06035 ), சென்னை சென்ட்ரல் இருந்து இன்று முதல் 2024 ஜனவரி 30-ம் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் காலை 7.10 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, மதியம் 2.15 மணிக்கு கோவை ரயில் நிலையம் வந்தடையும்.

மேலும், கோவை - சென்னை சென்ட்ரல் இடையிலான வந்தே பாரத் சிறப்பு ரயில் ( எண்: 06036 ), கோவையில் இருந்து இன்று முதல் 2024 ஜனவரி 30-ம் தேதி வரை செவ்வாய்க் கிழமைகளில் மதியம் 3.05 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு, இரவு 9.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் சென்றடையும். 8 பெட்டிகளுடன் இயங்கும் இந்த ரயில்கள், திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x