Published : 09 Nov 2023 05:45 AM
Last Updated : 09 Nov 2023 05:45 AM

சென்னை - நெல்லை இடையே 8 வந்தே பாரத் சிறப்பு ரயில்

சென்னை: வந்தே பாரத் சிறப்பு ரயில் சேவை குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியதாவது: தீபாவளியை முன்னிட்டு, சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு 8 வந்தே பாரத் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. அதன்படி எழும்பூரில் இருந்துநவ. 10, 11, 13, 14 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.45 மணிக்கு வந்தே பாரத் சிறப்புரயில் (06055) புறப்பட்டு, அதேநாள் மதியம் 2 மணிக்கு திருநெல்வேலியை அடையும்.

மறுமார்க்கமாக, திருநெல்வேலியில் இருந்து நவ.10, 11,13, 14 ஆகிய தேதிகளில் பிற்பகல் 3 மணிக்கு புறப்பட்டு, இரவு 11.15 மணிக்கு எழும்பூரை வந்தடையும். தாம்பரம், விழுப்புரம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x