Published : 04 Nov 2023 06:09 AM
Last Updated : 04 Nov 2023 06:09 AM
சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, சென்னை சென்ட்ரல்-திருநெல்வேலி இடையே ஏழைகள் ரதம் (கரீப் ராத்) என்ற ஏசி சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.
இந்த ரயில் (வண்டி எண் 06051) வரும் 8, 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் இயக்கப்படும். சென்னை சென்ட்ரலில் இருந்துஇரவு 11.15 மணிக்குப் புறப்பட்டுமறுநாள் காலை 11.45 மணிக்கு திருநெல்வேலி சென்றடையும்.மறுமார்க்கத்தில் இந்த ரயில்(06052) வரும் 9, 16 மற்றும் 23ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. திருநெல்வேலியில் இருந்து மாலை 3 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
இதேபோல், சென்னை சென்ட்ரல்-சந்திரகாச்சி இடையே அதிவிரைவு சிறப்பு கட்டண சிறப்பு ரயில் (06071) வரும் 11, 18,25 ஆகிய தேதிகளில் இயக்கப் படும். மறுமார்க்கத்தில் இந்த ரயில் (06072) வரும் 13, 20 மற்றும் 27 ஆகிய தேதிகளில் இயக்கப்படுகிறது. மேற்கண்ட ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT