Published : 08 Oct 2023 04:08 AM
Last Updated : 08 Oct 2023 04:08 AM

விழுப்புரம் - திருப்பதி விரைவு ரயில் 15-ம் தேதி வரை பகுதியளவில் ரத்து

விழுப்புரம்: பராமரிப்பு பணிகள் காரணமாக, விழுப்புரம் - திருப்பதி முன் பதிவில்லா விரைவு ரயில் அக்.15-ம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில் வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தெற்கு மத்திய ரயில்வேயின் குண்டக்கல் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் பொறியியல் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக, விழுப்புரத்தில் இருந்து காலை 5.30 மணிக்கு புறப்படும் விழுப்புரம் - திருப்பதி முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16854) காட்பாடி - திருப்பதி இடையே அக். 15-ம் தேதி வரை பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்த ரயில் காட்பாடியுடன் நிறுத்தப்படும். எதிர் வழித்தடத்தில் திருப்பதியில் இருந்து பிற்பகல் 1.50 மணிக்கு புறப்படும் திருப்பதி - விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரயில் (வண்டி எண் 16853) திருப்பதி - காட்பாடி இடையே அக்டோபர் 15-ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் காட்பாடி ரயில் நிலையத்தில் இருந்து மாலை 4.40 மணிக்கு விழுப்புரத்துக்கு புறப்படும் என்று அச்செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x