Published : 04 Oct 2023 06:16 AM
Last Updated : 04 Oct 2023 06:16 AM

சென்னையில் அக்.17 வரை மின்சார ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: சென்னை எழும்பூர் - விழுப்புரம் மார்க்கத்தில், தாம்பரம் யார்டில் பொறியியல் பணி நடக்க உள்ளதால், சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே இரு மார்க்கத்தில் தலா இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.

சென்னை கடற்கரை - தாம்பரத்துக்கு இன்று (அக்.4) முதல் அக். 17-ம் தேதி வரை இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,

இதேதடத்தில் அக். 8-ம் தேதி முதல் அக். 15-ம் தேதி வரை 11.55 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளன.

தாம்பரம் - சென்னை கடற்கரைக்கு அக்.4-ம் தேதி முதல் அக்.17-ம் தேதி வரை இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில்,

இதே தடத்தில் அக்.8-ம் தேதி முதல் அக்.15-ம் தேதி வரை இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரயில் ஆகிய இரண்டு மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளதாக சென்னை ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x