Published : 18 Sep 2025 06:40 AM
Last Updated : 18 Sep 2025 06:40 AM
கல்லூரிக் காலத்தில் வெயில் வீணாகப் போகிறதென்று உச்சிப் பொழுதிலும் ஊரைச் சுற்றிவிட்டு வீட்டுக்கு வந்தால், `உனக்கு ஒரு பதிவுத் தபால் வந்திருக்கிறதாம், நீ கையெழுத்துப் போட்டால்தான் தபால்காரர் தருவா ராம்’ என்று அம்மா சொன்னார். உடனே சைக்கிளில் பறந்தேன். வழியில் ஒரு கோயில் நிழலில் வெயிலுக்காக ஒதுங்கியிருந்தார் தபால்காரர்.
என்னைப் பார்த்ததும் சிரித்த படியே, `எம்.ஜி.ஆருக்குக் கடிதம் போட்டிருந்தீங்களோ, அவங்கல்லாம் பதிவுத் தபாலை வாங்க மாட்டாங்க, கடிதம் திரும்பி வந்துட்டு’ என்று கொடுத்தார். நான் அவரின் படத்துடன் கனமான தபாலை எதிர்பார்த்துப் போனால், நான் போட்ட கடிதமே திரும்ப வந்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT