Published : 11 Sep 2025 07:12 AM
Last Updated : 11 Sep 2025 07:12 AM
கேரளத்தின் கொல்லம் ரயில் நிலையத்தில் நின்ற சென்னை எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி அமர்ந்தேன். சற்று நேரத்தில் மிகப் பெரிய டிராலி பெட்டிகளும் பைகளும் ஏற்றப்பட்டன. ஏதோ வெளிநாடு செல்கிறவர்களாக இருக்கும் என்று நினைத்தேன். வயதான பெண்கள் ஏறினார்கள். அவர்களில் ஒருவர் ‘அயோத்தி’ போகிறோம் என்றார் முகம் எல்லாம் புன்னகையுடன். ஆன்மிகச் சுற்றுலா செல்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டேன்.
காலை மேல் பர்த்தில் படுத்திருந்த இளைஞர் ஒருவர் எழுந்து வந்து உட்கார்ந்தார். ’நான் ஆந்திராவைச் சேர்ந்தவன். சென்னையில் பணி யாற்றுகிறேன். சோலோ டிராவலர். இதுவரை 22 மாநிலங்களுக்குச் சென்றிருக்கிறேன். இப்போது கோட்டயத்துக்குச் சென்றுவிட்டுத் திரும்புகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT