Published : 12 Jun 2025 06:58 AM
Last Updated : 12 Jun 2025 06:58 AM
“வே அன்னா கிழக்கெ பாரும், கருகருன்னு மேகம் அடைக்க நிக்கி, கீத்துப் போல ஒண்ணு ரெண்டு மின்னலும் மின்னுது. ரெண்டு நாளு முந்தி, கிழக்கனக்கி (கிழக்கு நோக்கி) கடக்கரையாண்டி கோயிலுக்குப் போயிருந்தவக சொன்னாங்க, அங்க மழை வெளுவெளுன்னு வெளுத்திட்டாம்வே, கிழக்கு மழை அங்க பெஞ்சுதானே இங்க வரணும். இன்னைக்கி இங்கயும் மழைக்கு ஒரு கூராப்பா இருக்கு.”
“ஆமாய்யா, கருகருன்னுதான் நிக்கி ‘தெவக்க மில்லாம’ (தடங்கல் இல்லாமல்) பெஞ்சி குளம் நிரம்பிட்டா சந்தோசந்தாம்.” ``வெதை நெல்லைத்தின்னவன் வெளங்குவானாங்கிற மாதிரி இல்லாம, பசியும் பட்டினியு மாகக் கிடந்து நெல்லைப் பத்திரப் படுத்தி வச்சிருக்கோம். மழை விழுந்தா ரெண்டு ஏரு உழுது, விதைச்சு விட்டா மாரியாத்தா பாடு,”
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT