Last Updated : 03 Apr, 2025 06:14 AM

 

Published : 03 Apr 2025 06:14 AM
Last Updated : 03 Apr 2025 06:14 AM

ப்ரீமியம்
பெண்கள் பந்திக்குப் பாயசம் கிடைக்குமா? | பாற்கடல் 14

வீட்டில் ஒரு மங்கல நிகழ்வு என்று வந்துவிட்டால் மேலும் அதிகப் படியான வேலைகள் பெண்கள் தலையில்தான் விடியும். குழந்தை பிறந்து பெயர் வைப்பதில் தொடங்கி, பெண் குழந்தைகள் எனில் பூப்பெய்தியது தொடங்கி, சடங்கு நடத்தி, மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் உறுதிசெய்து, நிச்சயதாம்பூலம் நடத்தி, திருமணத்திற்குப் பந்தல்கால் நட்டு, திருமணம் நடத்தி என்று வரிசையாக ஒவ்வொரு நன்னிகழ்விலும் பெண்களின் பங்குதான் அதிகம். அதிலும் அந்தக் காலத்தில் கேட்கவே வேண்டாம்.

அப்போது கேட்டரிங் சர்வீஸ் எல்லாம் கிடையாது. ஆண்கள் அலைந்து திரிந்து கடைகளுக்குப் போய்ச் சாமான்களுக்கு லிஸ்ட் கொடுத்து வருவார்கள். வாங்கினவற்றைப் பத்திரப்படுத்தி, தவசுப்பிள்ளையோ சாஸ்திரிகளோ கேட்கும் போது, பொருள்களைச் சிக்கனமாக எடுத்துத் தந்து, வீணாகாமல் பார்த்துக் கொள்வதும் பெண்கள் பொறுப்பே.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x