Published : 20 Feb 2025 06:17 AM
Last Updated : 20 Feb 2025 06:17 AM
‘உங்க வீட்டுக்கு விருந்தாள் வந்திருக்காங்கடே’ என்று விளையாட்டுக்கு நடுவே யாராவது சொல்வார்கள். விளையாட்டுக்கு ‘ரெஸ்ட்’ சொல்லிவிட்டு வீட்டுக்கு ஓடுவோம். பாதி விளையாட்டில் ‘ரெஸ்ட்’ அல்லது `தூரி’ சொல்லிவிட்டுப் போவதற்குப் பல விதிகள் உண்டு.
தொட்டுப்பிடித்து விளையாட்டு என்றால் முதல் விதி நாம் தொட்டு வருபவராக இருக்கக் கூடாது. பம்பரக்குத்து என்றால் நம் பம்பரம் வட்டத்துக்குள் இருப்பவராக, கோலிக்காய் விளையாட்டு என்றால் கோலிக்காய் `பேந்தா’ கட்டத்துக்குள்ளே இருக்கக் கூடாது. அப்படியே தூரி சொல்ல வேண்டிய கட்டாயம் இருந்தால், தோற்றுப் போனால் என்ன பந்தயம் அல்லது தண்டனை என்று பேசினோமோ அதை அப்போதே செய்துவிட்டுப் போக வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT