Published : 28 Nov 2022 06:38 AM
Last Updated : 28 Nov 2022 06:38 AM

ப்ரீமியம்
கடன், வட்டி சுமையிலிருந்துவிடுபட வேண்டுமா? - முதலில் சேமியுங்கள்... பின்னர் வாங்குங்கள்..!

சித்தார்த்தன் சுந்தரம்

நவீன யுகத்தில் தள்ளுபடி, வெகுமதி, இலவசங்களை அசட்டை செய்யும் மனிதர்கள் யாரேனும் இருக்கக்கூடுமா எனக் கேட்டால் இருக்கக்கூடும். ஆனால் அவர்கள் வெகுசிலராக இருப்பார்கள். எந்த விதிக்குமே விதிவிலக்கு இருப்பது போல இதற்கும் விதிவிலக்கு உண்டு. ஆனால் பொதுவாக, ஒருவர் சமூகத்தில் எந்த நிலையில் இருந்தாலும் தள்ளுபடியை அல்லது பணத்தை மீளப் பெறுவதை (cashback) விரும்பாதவர்கள் இருக்கமாட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

`பொருள்/சேவையை இப்போது வாங்கிக் கொண்டு பிறகு பணம் செலுத்தலாம்’ என்கிற `பை நவ் பே லேட்டர் (பிஎன்பிஎல்)’ என்கிற கருத்தை அடிப்படையாகக் கொண்டு சமீப காலத்தில் பல `ஸ்டார்ட்-அப்’கள் காளான்கள் போல முளைத்திருக்கின்றன. ஆனால்அது ஒரு குறிப்பிட்ட நிலையை அடைந்துசந்தையில் நிலைபெறுவதற்கு முன்பே `இப்போது சேமியுங்கள் பிறகு வாங்குங்கள்’ என்கிற கருத்தியலைக் கொண்ட `சேவ் நவ் பை லேட்டர் (எஸ்என்பிஎல்)’ என்கிற கோட்பாட்டின் அடிப்படையில் சில `ஸ்டார்ட்-அப்’ கள் சந்தையை வலம் வர ஆரம்பித்திருக்கின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x