Published : 30 Dec 2019 10:19 AM
Last Updated : 30 Dec 2019 10:19 AM
கியா மோட்டார்ஸ் இந்திய சந்தையில் இந்த வருட ஜூலை மாதம்தான் கால்பதித்தது. அதன் எஸ்யூவி மாடலான செல்டோஸ் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் கியா மோட்டார்ஸ், செல்டோஸ் எஸ்யூவி-ஐ எலெக்ட்ரிக் மாடலாக கொண்டுவர உள்ளது. செல்டோஸ் பெட்ரோல், டீசல் வேரியண்டுகளில் தற்போது வெளிவந்துகொண்டிருக்கிறது.
ஆனால், வாகன உலகம் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளுக்கு மாறிவருகிற நிலையில், கியா மோட்டர்ஸ் செல்டோஸை எலக்ட்ரிக் மாடலில் அறிமுகம் செய்ய உள்ளது. தோற்ற அமைப்பில் தற்போது இருக்கும் மாடலுக்கும் புதிய எலெக்ட்ரிக் மாடலுக்கும் பெரிய அளவில் வேறுபாடு இருக்காது என்று கூறப்படுகிறது.
இதன் பேட்டரி முழுவதுமாக சார்ஜ் செய்தால் 400 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. கியா மோட்டார்ஸ் தற்போது ஆசிய சந்தைகளில் அதிக கவனம் செலுத்தும்.
எனவே எலெக்ட்ரிக் செல்டோஸ் முதலில் ஆசிய சந்தைகளில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. இந்தியாவில் இந்த மாடல் 2021-க்குப்பிறகுதான் அறிமுகமாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஆனால் விரைவிலேயே கியாவின் கார்னிவில் எம்பிவி இந்திய சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT