Published : 17 Nov 2025 07:45 AM
Last Updated : 17 Nov 2025 07:45 AM
டெல்கோ நிறுவனம் (இப்போது டாடா மோட்டார்ஸ்) கடந்த 1991-ம் ஆண்டு சியாரா எஸ்யுவி காரை அறிமுகம் செய்தது. இதுதான் உள்நாட்டில் தயாரான முதல் எஸ்யுவி கார். 1997-ல் இதன் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இந்நிலையில், புதிய சியாரா காரை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது.
இது விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. பழைய சியாரா காரை நினைவுபடுத்தும் வகையிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆகிய 2 வகைகளிலும் கிடைக்கும். மின்சார காரும் கிடைக்கும். இதன் ஆரம்ப விலை ரூ.17 லட்சமாகவும் அதிகபட்ச விலை ரூ.22 லட்சமாகவும் நிர்ணயிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT