Published : 18 Aug 2025 07:29 AM
Last Updated : 18 Aug 2025 07:29 AM
கடந்த 2014-ம் ஆண்டு ‘உள்நாட்டில் தயாரிப்போம்’ திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது, இந்தியாவை உலகின் ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி மையமாக நிலைநிறுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது. குறிப்பாக இத்துறை சார்ந்த தொழிற்சாலைகளில் 80% குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களாக உள்ளன.
இதன்மூலம் ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழில் அதிக அளவில் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக 2-ம் இடத்தில் உள்ளது. கடந்த 2023-24 நிதியாண்டின் புள்ளிவிவரப்படி ஜவுளித் துறை நாடு முழுவதும் 4.5 கோடிக்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பை வழங்கி வருகிறது. குறிப்பாக ஊரக பகுதிகளில் பெண்களுக்கு அதிக அளவில் வேலைவாய்ப்பை வழங்குகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT