Published : 28 Jul 2025 06:54 AM
Last Updated : 28 Jul 2025 06:54 AM
இங்கிலாந்தின் ஈஸ்ட் இந்தியா கம்பெனி கடந்த 1600-ம் ஆண்டில் வர்த்தகம் செய்வதற்காக கடல் மார்க்கமாக இந்தியாவில் நுழைந்தது. ஆனால் அடுத்த இரு நூற்றாண்டுகளில் அந்நிறுவனம் படிப்படியாக இந்தியாவை தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தது.
ஆட்சியைக் கைப்பற்றி நம்மை அடிமைப்படுத்திய இங்கிலாந்து, இன்று நம்முடன் சமமான கூட்டாளியாக நின்று, இருதரப்புக்கும் நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருக்கிறது. இந்தியா, இங்கிலாந்து இடையிலான தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் (Free Trade Agreement) 2025 ஜூலை 24-ம் தேதி, இந்தியப் பிரத மர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் முன்னிலையில் கையெழுத்தானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT