Published : 23 Jun 2025 07:46 AM
Last Updated : 23 Jun 2025 07:46 AM
அமெரிக்க அதிபராக 2-வது முறையாக பொறுப்பேற்ற டொனால்டு ட்ரம்ப், தங்கள் நாட்டின் பொருட்களுக்கு உலக நாடுகள் அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார். இதற்கு பதிலடியாக உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை உயர்த்தினார். அவரது இந்த வரி விதிப்பு முடிவு உலக நாடுகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இவரது இந்த நடவடிக்கை உலக வர்த்தகத்திலும் பொருளாதாரத்திலும் இதுவரை காணாத குழப்ப நிலையை உருவாக்கியது. இதையடுத்து, இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் வர்த்தக வரி தொடர்பாக ஒப்பந்தம் செய்துகொள்ள முன்வந்தன. இது தொடர்பான பேச்சுவார்த்தை தொடங்கியதையடுத்து, வரி உயர்வை தற்காலிகமாக ட்ரம்ப் நிறுத்தி வைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT