Published : 23 Jun 2025 07:39 AM
Last Updated : 23 Jun 2025 07:39 AM
மே மாதத்துக்கான மியூச் சுவல் பண்ட் முதலீட்டு தரவை இந்திய மியூச்சுவல் பண்ட் சங்கம் (AMFI) சமீபத்தில் வெளியிட்டது. இதன்படி, மே மாதத்தில் பங்குகள் சார்ந்த திட்டங்களுக்கான நிகர முதலீடு 22% குறைந்துள்ளதாக தகவல் வெளியானது. அதாவது ஏப்ரலில் ரூ.24,269 கோடியாக இருந்த முதலீடு, மே மாதத்தில் ரூ.19,013 கோடியாக குறைந்துவிட்டது. இதனால், மியூச்சுவல் பண்ட்களில் முதலீட்டாளர்களின் நம்பிக்கை குறைந்துள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. இந்த தரவை சற்று விரிவாக பார்க்கலாம்.
முதலில், நிகர முதலீடு என்பது மொத்த முதலீட்டிலிருந்து திரும்பப்பெறப்பட்ட முதலீட்டை (Redemptions) கழித்த பிறகு வரும் தொகை. பணம் தேவை, பழைய முதலீட்டை மாற்றி புதிய நல்ல பண்டை தேர்வு செய்தல் என திரும்பப்பெறுவது பல காரணங்களுக்காக நடக்கலாம். மொத்த முதலீடு என்பது முதலீட்டாளர்கள் போட்ட மொத்த தொகை. அதனால்தான் இதை கவனிக்க வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT