Published : 14 Apr 2025 07:51 AM
Last Updated : 14 Apr 2025 07:51 AM

ப்ரீமியம்
ரிசர்வ் வங்கி டாலர்–ரூபாய் பரிமாற்ற ஏலம் நடத்துவது ஏன்?

வங்கிகளில் ஏற்பட்டுள்ள ரூபாய் பற்றாக்குறையை நீக்குதல், ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவதை தடுத்தல் மற்றும் அந்நிய செலாவணி இருப்பை அதிகரித்தல் ஆகிய மூன்று முதன்மையான நோக்கங்களுக்காக இந்திய ரிசர்வ் வங்கி டாலர்-ரூபாய் பரிமாற்ற (swap) ஏலங்களை மேற்கொள்கிறது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்திய பங்கு சந்தையில் செய்துள்ள போர்ட்போலியோ முதலீடுகளை அதிக அளவில் திரும்பப் பெற்றதால் ஏற்பட்ட நிதி நெருக்கடிகளை சமாளிக்க ஜனவரியில் 5 பில்லியன் டாலர் மதிப்பிலான ஆறு மாத கால டாலர்-ரூபாய் பரிமாற்ற ஏலத்தினை ரிசர்வ் வங்கி மேற்கொண்டது. 10 பில்லியன் டாலர் மதிப்பிலான மூன்றாண்டு கால டாலர்-ரூபாய் பரிமாற்ற ஏலங்களை பிப்ரவரியிலும் மார்ச்சிலும் மீண்டும் மேற்கொண்டது. இதன் பின்னணியில் பல்வேறு அரசியல் பொருளாதார காரணங்கள் உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x