Published : 17 Mar 2025 06:29 AM
Last Updated : 17 Mar 2025 06:29 AM
கரோனா பெருந்தொற்று காலத்தில் அலுவலகங்கள் பணியிட சவால்களை எதிர்கொண்ட நிலையில், செலவு குறைந்த கோ-ஒர்க்கிங் ஸ்பேஸ் எனப்படும் பணியிட பகிர்வு மையங்கள் அதிகரித்து வருகின்றன. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் முதல் புத்தொழில் நிறுவனங்கள் (ஸ்டார்ட்-அப்) வரை இத்தகைய மையங்களை நாடி வருகின்றனர்.
பணியிட பகிர்வு மையம் என்பது பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் ஒரே இடத்தில் பணி புரிவதற்கான ஏற்பாடு ஆகும். தனியாக அலுவலகம் அமைக்க வசதி இல்லாத நிறுவனங்களுக்காக இத்தகைய மையங்கள் செயல்படுகின்றன. இவற்றில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளன. தேநீர், காபி உள்ளிட்டவற்றை பணம் செலுத்தி பருகலாம். நிறுவனங்கள் தங்கள் ஊழியர்கள் பணிபுரியும் இருக்கைக்கு மட்டும் கட்டணம் செலுத்தினால் போதுமானது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT