Published : 17 Feb 2025 06:28 AM
Last Updated : 17 Feb 2025 06:28 AM
கோவையைச் சேர்ந்த சரவணக்குமார் (48) 25 ஆண்டுக்கு முன்பு வேலைக்காக இங்கிலாந்து சென்றார். தகவல் தொழில்நுட்ப துறையில் 10 ஆண்டுகளாக வேலை செய்த அவர், கடந்த 2010-ம் ஆண்டு லண்டனை தலைமையகமாகக் கொண்டு, அதேநேரம் தனது சொந்த ஊரை குறிக்கும் வகையில் கோவை.கோ என்ற பெயரில் ஒரு ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை தொடங்கினார். இதன் அலுவலகம் கோவையிலும் இயங்குகிறது.
இந்நிறுவனம் மென்பொருள் தீர்வுகளை வழங்கி வருகிறது. கடந்த 2011-ல் பிஸ்டாக்360 என்ற பெயரில் தனது முதல் மென்பொருளை அறிமுகம் செய்தது. 5 முக்கிய மென்பொருளைக் கொண்டுள்ள இந்நிறுவனத்தில் 240-க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். எண்ணெய் நிறுவனமான ஷெல், விமான தயாரிப்பு நிறுவனமான போயிங், ஊடக நிறுவனமான பிபிசி ஆகியவை இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்களில் குறிப்பிடத்தக்கவை ஆகும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT