Published : 10 Feb 2025 06:31 AM
Last Updated : 10 Feb 2025 06:31 AM

ப்ரீமியம்
பொன் விழா கண்ட இந்திய தென் கொரிய வர்த்தகக் கூட்டுறவு

கடந்த 1973-ம் ஆண்டு இந்தியா, தென்கொரியா இடையே அதிகாரப்பூர்வமான வர்த்தக தொடர்பு தொடங்கியது. பொன் விழா (50 ஆண்டுகள்) கண்ட இந்த கூட்டுறவு அபரிமிதமான வளர்ச்சியை எட்டி உள்ளது. தொடக்கத்தில் இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக மதிப்பு வெறும் ரூ.121 கோடியாக இருந்தது. இது 2023-ம் ஆண்டில் ரூ.2.4 லட்சம் கோடியைத் தாண்டி, 1,940 மடங்கு வளர்ச்சி அடைந்துள்ளது. இது இரு நாடுகளின் பொருளாதார ஒத்துழைப்பின் வலிமையையும் பரஸ்பர நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது. தென்கொரியாவின் வெளிநாட்டு முதலீடுகளில் இந்தியா 13-ம் இடத்தைப் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் கொரியாவின் முதலீடுகள் குறிப்பிடத்தக்க அளவில் இருந்தாலும், முன்னணி முதலீட்டாளர்களுடன் ஒப்பிடும்போது இன்னும் வளர்ச்சிக்கான வாய்ப்புகள் நிறைய உள்ளன. இந்த நிலையை மேம்படுத்த இரு நாடுகளும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்ந்து வருகின்றன. கொரியாவின் முதலீடுகள் வரும் காலங்களில் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x