Published : 31 May 2025 07:09 AM
Last Updated : 31 May 2025 07:09 AM

ப்ரீமியம்
பொன்வண்டு மரம்

இந்து தமிழ் உயிர்மூச்சில் 10-05-2025 அன்று வெளிவந்த 'தங்க மழை பொழிகிறது' கட்டுரை அருமை. கட்டுரையை வாசித்து முடித்தபோது சிறு வயது கிராமத்து வாழ்க்கை மனதில் நிழலாடியது. சிறு வயதில் சரக்கொன்றை மரத்தைப் பொன்வண்டு மரம் என்றே கூறுவோம். பொன்வண்டுகள் சரக்கொன்றை மரத்தின் இலையைத்தான் உண்ணும்.

பொன்வண்டைப் பிடிப்பதும், அதை வீட்டில் வைத்து வளர்ப்பதும் அப்போது பொழுதுபோக்கு. பொன்வண்டைப் பிடித்து, ஒரு சிறு குடுவையில் போட்டு, அதனுடன் சரக்கொன்றை இலையையும் போட்டுவிடுவோம். பொன்வண்டு அந்த இலையைச் சிறிதுசிறிதாகச் சாப்பிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x