Last Updated : 26 Apr, 2025 07:06 AM

 

Published : 26 Apr 2025 07:06 AM
Last Updated : 26 Apr 2025 07:06 AM

ப்ரீமியம்
நெய்தல் முன்வைக்கும் பல்திணை உரையாடல் | உலகப் புத்தக வாரம்

தமிழகக் கடற்கரைப் பகுதியான சோழ மண்டலத்தின் திருவள்ளூர் தொடங்கி பாக் குடா, மன்னார் வளைகுடா வழியே மேற்கு மண்டலக் கடற்கரையின் கன்னியாகுமரி வரை 20 ஆண்டு காலத் தொடர் பயணம். ஒரு கடலோடியின் கண்களின் வழியே நெய்தல் தரிசனம்.

தந்தையின் கரம் பற்றி மகிழ்வுடன், வியப்புடன், பேராவலுடன் வழிப்பயணம் செல்லும் சிறுவனாக நான். எத்தனையோ புனைகதைகளில் மட்டுமே கடலைக் கண்ட எனக்கு, ஒரு நனவுலகத்தின் கடல்சார் மக்களின் வாழ்க்கை முறையை, கறுத்த கோடுகளுடன் வரைபடமாக நம் கண்முன் விரித்து, ஆழமாக, அகலமாக, ஆவேச அலைகளுடன் விரிகிறது, பேராசிரியர் வறீதையாவின் ‘துறையாடல்’.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x