Published : 20 Oct 2025 07:09 AM
Last Updated : 20 Oct 2025 07:09 AM
வானில் சற்றே பெரிதாக, மிகப்பிரகாசமாக முழுநிலவு தோன்றுவதைப் ‘பெருநிலவு’ (super moon) என்று கொண்டாடுகின்றனர் அறிவியலாளர்கள். பூமி, நிலவு, சூரியன் மூன்றும் ஒரே வரிசையில் அமைவதால் உருவாகும் இந்நிகழ்வு, ஓராண்டில் 3 அல்லது 4 முறை நிகழும்.
பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றிவரும் நிலவு, அன்றைய தினம் ‘பெரிகீ’ (perigee) எனும் புள்ளியில் பூமிக்கு அருகே 3,63,300 கி.மீ. தொலைவில் இருப்பதால் வழக்கத்தைவிட 14% பெரிதாக, 30% பிரகாசமாகத் தோற்றமளிக்கிறது. அக்டோபர் 6 அன்று பெருநிலவைக் காணத் தவறியவர்கள், நவம்பர் 5 அன்று மீண்டும் இதைக் காண முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT