Published : 20 May 2025 05:00 PM
Last Updated : 20 May 2025 05:00 PM
மே 13: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேருக்குச் சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மே 13: பஞ்சாப் மாநிலத்தில் உள்ள இந்திய விமானப் படைத் தளத்தில் வீரர்களைச் சந்தித்து பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
மே 13: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே கள்ளச்சாராயம் குடித்த 17 பேர் உயிரிழந்தனர்.
மே 14: ஆகம விதிகளுக்கு உட்பட்ட கோயில்களில் அனைத்து சாதி அர்ச்சகர்களை நியமிக்கத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
மே 14: உச்ச நீதிமன்றத்தின் 52ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய்க்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மே 15: மசோதாக்கள் குறித்து முடிவு எடுக்கக் குடியரசுத் தலைவர், ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு நிர்ணயித்த விவகாரத்தில் 14 கேள்விகளை எழுப்பி உச்ச நீதிமன்றத்திடம் குடியரசுத் தலைவர் விளக்கம் கேட்டுள்ளார்.
மே 16: டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி முறைகேடுகள் நடந்துள்ளதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டியிருந்த நிலையில், டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் விசாகன் வீடு உள்பட 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
மே 16: தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்வு எழுதிய 8.71 லட்சம் பேரில் 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். சிவகங்கை மாவட்டம் 98.31% தேர்ச்சி பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்தது.
மே 17: பாகிஸ்தான் தீவிரவாத ஆதரவு குறித்து உலக நாடுகளின் தலைவர்களிடம் விளக்க ரவிசங்கர் பிரசாத், சசி தரூர், கனிமொழி உள்ளிட்ட 7 பேர் தலைமையில் எம்.பி.க்கள் குழு வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளது.
மே 17: மின் தடையால் பாதிக்கப்பட்ட நீட் தேர்வு மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த உத்தரவிடக் கோரிய வழக்கில் நீட் தேர்வு முடிவுகளை வெளியிடத் தடை விதித்து தேசிய தேர்வு முகமைக்குக் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
மே 18: உச்ச நிதிமன்றத்துக்கு குடியரசுத் தலைவர் 14 கேள்விகள் எழுப்பிய நிலையில் இது தொடர்பாக 8 மாநில முதல்வர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
மே 18: ஹைதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 சிறுவர்கள், 5 பெண்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.
மே 18: ரோமில் நடைபெற்ற இத்தாலி ஓபன் டென்னிஸ் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இத்தாலி வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி பட்டம் வென்றார்.
மே 19: பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி அபு சைபுல்லா பாகிஸ்தானில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மே 19: உலக நாடுகள் பலவற்றிலிருந்து இங்கு வந்து அகதியாகத் தங்குவதற்கு இந்தியா தர்ம சத்திரம் கிடையாது என்று இலங்கைத் தமிழர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
தொகுப்பு: மிது
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT