Last Updated : 22 Apr, 2025 04:14 PM

 

Published : 22 Apr 2025 04:14 PM
Last Updated : 22 Apr 2025 04:14 PM

தமிழ்நாட்டில் முன்மொழியப்பட்ட சட்டத் திருத்தங்கள் முதல் பல்வேறு விருது அறிவிப்புகள் வரை: சேதி தெரியுமா? @ ஏப்ரல் 15-17

ஏப்.15: மாநிலங்களின் நியாயமான உரிமைகளைப் பாதுகாப்பது, மத்திய - மாநில அரசுகளுக்கு இடையேயான உறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

ஏப்.15: நேஷனல் ஹெரால்டு வழக்கில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.

ஏப்.15: 2025ஆம் ஆண்டுக்கான ‘சிறந்த திருநங்கை’ விருதை ரேவதி, பொன்னி ஆகியோருக்கு முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

ஏப்.16: கல்வி நிறுவனங்களின் பெயர்களில் உள்ள சாதிப் பெயர்களை 4 வாரங்களில் நீக்காவிட்டால், அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஏப்.16: அசராணைகளை தமிழில் மட்டுமே வெளியிட வேண்டும் என்று அரசுத் துறை செயலாளர்களுக்கு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் உத்தரவிட்டார்.

ஏப்.16: தமிழ் இலக்கிய வளர்ச்சிக்காக பாடுபட்டு வரும் பேராசிரியர் தமிழவன், ப. திருநாவுக்கரசு ஆகியோருக்கு மா. அரங்கநாதன் இலக்கிய விருதை உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன் வழங்கினார்.

ஏப்.16: நகர்ப்புறம், ஊரக உள்ளாட்சிகளில் மாற்றுத் திறனாளிகளை நேரடியாகத் தேர்தலில் போட்டியிடாமல் நியமன உறுப்பினர்களாக நியமிப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவை முதல்வர் மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.

ஏப்.16: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா சட்ட அமைச்சகத்துக்குப் பரிந்துரை செய்தார்.

ஏப்.16: வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து தொடர்பட்ட வழக்குகளில் இந்து மத அறக்கட்டளையில் முஸ்லீம்களை உறுப்பினராக அனுமதிப்பீர்களா என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

ஏப்.17: வக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் வக்பு வாரியங்கள், கவுன்சில்களில் புதிய நியமனங்களை மேற்கொள்ளக் கூடாது என்று என்று உச்ச நீதிமன்றம் உத்தரவுட்டுள்ளது.

ஏப்.17: மேற்கு வங்கத்தில் மாணவர்களின் நலன் கருதி புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படும் வரை பணி நீக்கம் செய்யப்பட்ட 25 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்ற உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

ஏப்.17: குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

ஏப்.17: சைவம், வைணம் தொடர்பாக அவதூறாக பேசிய அமைச்சர் பொன்முடியின் மீது வழக்குப் பதிய வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x