Published : 17 Jun 2017 10:40 AM
Last Updated : 17 Jun 2017 10:40 AM

குளிர்ச்சி தரும் ஓடுகள்

கட்டுமானத்துறையில் நவீன த்தொழில்நுட்பங்களுடன் கூடிய புதிய புதிய பொருட்கள் சந்தைக்கு வந்தவண்ணம் உள்ளன. அந்த வகையில் வீட்டில் உஷ்ணத்தைக் குறைக்கவும் நவீனத் தொழில்நுட்பம் வந்துள்ளது. உஷ்ணத்தை உள்ளிழுத்துக்கொள்ளும் டைல்களை மாடியின் மேல்புறத்தில் பதிப்பதன் மூலம் உஷ்ணத்தைக் குறைக்க வழி கிடைத்துள்ளது.

வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்டுவந்த, இந்த வகை டைல்கள் இப்போது இந்தியாவிலும் உற்பத்திசெய்யப்படுகின்றன. இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டும், உஷ்ணத்தைக் குறைக்கும் மூலப் பொருட்களின் கலவையைக் கொண்டும் உயரழுத்த முறையில் டைல்களைப் பல நிறுவனங்கள் இன்று உற்பத்திசெய்துவருகின்றன.

இந்த வகையான டைல்கள் இயற்கையான மூலப் ருட்களைக் கொண்டு தயாரிக்கப்படுவதால் குறைந்த வெப்பத்தை வெளிப்படுத்துவதுடன் கட்டிடத்தின் உஷ்ணத்தைக் குறைத்துக் குளிர்ச்சியையும் அதிகப்படுத்துகிறது. இதுபோன்ற டைல்களைப் பயன்படுத்துவதன் மூலம் வீட்டின் குளிர்ச்சிக்காகப் பயன்படுத்தப்படும் குளிர்சாதனங்கள், மின் விசிறிக்கான மின் தேவை குறையும். மேலும், இந்த டைல்கள் மூலம் நீர் உறிஞ்சப்பட்டு இரும்பு கம்பிகள் துருப்பிடித்து கான்கிரீட் சேதமடையாமலும் காக்கப்படுகிறது. உஷ்ணத்தைத் தடுக்கும் இந்த வகையான டைல்களை மாடியின் மேல்புறத்தில் ஒட்டினால், கீழ் தளத்துக்கும் மாடி வீட்டுக்கும் குளிர்ச்சி கிடைக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x