Published : 16 Oct 2022 11:00 AM
Last Updated : 16 Oct 2022 11:00 AM

ப்ரீமியம்
நிதியமைச்சரால் கிடைத்த வெளிச்சம்

டி.விஜயராஜ்

சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் உள்ள சந்தைக்கு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றது கடந்த வாரம் பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று. சந்தையில் அமைச்சர் காய் வாங்கும் படத்தைப் பலரும் பகிர்ந்து கருத்துத் தெரிவித்திருந்தனர். நிதியமைச்சர் காய் வாங்கிய கடையை நடத்தும் பத்மாவின் நிதி நிலைமை எப்படி இருக்கிறது எனக் கேட்டால், “எல்லாம் அப்படியேதான் இருக்கிறது” எனப் புன்னகைக்கிறார். “உங்க கடைக்குத்தானே நிதியமைச்சர் வந்தாங்க? ஒரே நாளில் பேமஸாகிட்டன்னு நிறைய பேர் சொன்னாங்க” என்று சொல்லும் பத்மா சென்னையில் பிறந்து வளர்ந்தவர். அவருடைய கணவர் முருகன் விழுப்புரத்தைச் சேர்ந்தவர். இருவரும் சேர்ந்துதான் காய்கறிக் கடையை நடத்திவருகிறார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x