Published : 09 Nov 2025 08:27 AM
Last Updated : 09 Nov 2025 08:27 AM
கல்யாணம் ஆன புதிதில் மனைவியிடம் என் அம்மா, ‘அவனுக்கு வெந்நீர்கூட வைக்கத் தெரியாது. பார்த்துக்கோ அம்மா’ என்றார். இந்தக் காலமாக இருந்தால், ‘நல்லாத்தான் வளர்த்திருக்கீங்க பிள்ளையை’ என்று நேரிலேயே சொல்லி இருப்பார் என் மனைவி. ஆனால், அன்று ‘இதில் என்ன பெருமை?’ என்பது போலப் பார்த்தார். நான் வங்கி வேலைக்குப் போகும் பெருமையில் அடுப்படிப் பக்கமே செல்வதில்லை. எல்லாம் கைக்கு வந்துவிடும். ஆனால், பணி ஓய்வுக்குப் பிறகு, என் மனைவிக்கும் உடல்நலம் குன்றியதால் ஏதாவது உதவலாமே என்று நினைத்தேன். பந்தி பரிமாறும் வேலையில் இலைக்கு அப்பளம் போடுவதுதான் எளிய வேலை. அது போலத் துலக்கி வைக்கப்பட்ட பாத்திரங்களை அடுக்கும் வேலையைச் செய்யத் தலைப்பட்டேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT