Last Updated : 19 Oct, 2025 12:03 PM

 

Published : 19 Oct 2025 12:03 PM
Last Updated : 19 Oct 2025 12:03 PM

ப்ரீமியம்
போர்முனையில் ஒரு  பெண்! | வானமே எல்லை

அமெரிக்க ஒளிப்படப் பத்திரிகையாளர் லின்சே அடாரியோ. பெண்களையும் குழந்தைகளையும் போர்முனைக்கு அனுப்பக் கூடாது என்கிற மனிதநேயச் சிந்தனைகள் எல்லாம் மரத்துப்போய் உலகின் பல பகுதிகளிலும் நடைபெறும் போர்களில் பெண்களும் குழந்தைகளும் கொத்துக்கொத்தாகக் கொல்லப்படும் இந்தக் காலத்தில் போர்முனைக் காட்சிகளைப் படமெடுப்பதுதான் லின்சேவின் பணி. ‘தி நியூயார்க் டைம்ஸ்’, ‘நேஷனல் ஜியாகிரஃபிக்’ இதழ்களுக்காகக் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இவர் பணியாற்றிவருகிறார். ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, லெபனான், தெற்கு சூடான், சோமாலியா, காங்கோ குடியரசு, ஏமன், சிரியா எனப் பல நாடுகள் தொடங்கி தற்போதைய உக்ரைன் போர்வரைக்கும் லின்சே படமெடுத்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x