Published : 12 Oct 2025 08:23 AM
Last Updated : 12 Oct 2025 08:23 AM
என் சிறு வயதில் அம்மாவைப் பார்க்கும்போதெல்லாம் சமையலறையிலேயே அவரது நாள்கள் கழிந்துவிடுவதைப் போல் இருக்கும். நான் பத்தாம் வகுப்பு வந்ததுமே, அம்மாவுக்கு உதவத் தொடங்கினேன். அவர் சமைத்து முடித்ததும் பாத்திரங்களை ஒதுக்கிவைத்து, சமையல் மேடையைத் துடைப்பேன். அந்தச் சிறு உதவியே அம்மாவுக்குப் பெரும் ஆசுவாசத்தை அளித்தது. ‘வீட்டுவேலை என்பது பெண்களின் வேலை அல்ல; அதுவொரு குடும்பப் பொறுப்பு’ என்பது புரிந்தபோது என் பங்களிப்பை அதிகமாக்கினேன். திருமணத்துக்குப் பிறகும் அதைத் தொடர்கிறேன். காலையில் காபி போடுவதில் தொடங்கிக் காய்கறிகளை நறுக்குவது, தோசை சுடுவது, சப்பாத்திக்கு மாவு பிசைவது, துணி துவைத்து உலர்த்துவது, மகளைப் பள்ளிக்குக் கிளப்புவது என என்னால் முடிந்த வேலைகளை விரும்பிச் செய்வேன். நான் வைக்கிற தக்காளித் தொக்கு என் மனைவிக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், மாதத்தில் இரண்டு நாட்களாவது அதைச் செய்வேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT