Published : 21 Sep 2025 07:48 AM
Last Updated : 21 Sep 2025 07:48 AM
இது இந்தக் கட்டுரைத் தொடரின் நிறைவுப் பகுதி. 49 வாரங்கள் என் மனதில் இருந்த அவ்வளவு கொந்தளிப்புகளையும் உங்களோடு உரையாட முடிந்ததைப் பெரிய வெற்றியாக நான் பார்க்கிறேன். சிறுவயதிலிருந்தே என்னுடைய கருத்துக்களை நான் சொல்ல முன்வரும் போதெல்லாம் என்னுடைய அம்மா அதற்குத் தடை போடுவார். ‘சின்ன பிள்ளைக்குச் சொல்ல என்ன இருக்கு?’ என்று என் உரையாடலை அப்படியே கத்தரித்துவிடுவார். அது எனக்குள் தீவிரமான தாழ்வு மனப்பான்மையை உருவாக்கியிருந்தது. என்னுடைய கருத்துக்கள் யாருக்கும் தேவை யற்றவை என்கிற மனநிலையில் யார் எதைப் பற்றிக் கேட்டாலும் - நான் வளர்ந்த பிறகும் -சொல்வதற்கு மிகவும் தயங்குவேன். அந்த மனக் கொந்தளிப்புகளைத்தான் நான் சிறுகதைகளாக மாற்றியிருக்கிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT