Published : 14 Sep 2025 08:28 AM
Last Updated : 14 Sep 2025 08:28 AM
நான் 2003இல் பதினோராம் வகுப்புப் படிக்கும்போது பேச்சுப் போட்டிக்கு என் தோழி ஆனந்தி என் பெயரை நான் மறுத்தபோதும் பரிந்துரைத்தாள். தாமதமாகப் பெயரைப்பதிவு செய்ததால் பள்ளியில் எல்லா ஆசிரியர்களும் மற்றவர்களுக்கு எழுதிக் கொடுத்துவிட்டார்கள். செய்வதறியாமல் எங்கள் சிறிய கிராமத்தில் இருந்த நூலகத்தில் காமராசரைப் பற்றிய புத்தகத்தை வாசித்து, ‘நான் பிரதமரானால்’ என்கிற தலைப்பில் நானே எழுதியும் பேசியும் முதல் பரிசு பெற்றேன். அதைத் தொடர்ந்து அந்த நூலகத்தில் உள்ள குட்டி குட்டி புத்தகங்கள் மொத்தத்தையும் வாசித்தேன். இன்று வரை தினமும் ஒரு மணி நேரமாவது வாசித்துவிடுகிறேன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT