Published : 14 Sep 2025 08:24 AM
Last Updated : 14 Sep 2025 08:24 AM
‘காட்டுக்குட்டி’ நாவல் பாலியல் தொழிலாளிகளின் வாழ்க்கைச் சூழலை, அவர்களை இச்சமூகம் எவ்வாறு உருவாக்குகிறது, எந்த அளவுக்குப் பாவிப் பட்டியலில் நிறுத்தி வைத்திருக்கிறது என்பதை வைத்து 2017இல் நான் எழுதியது. இந்நாவல் வெளிவந்தபோது, ‘இது அவள் அனுபவம்’ என்கிற ஒற்றை வரியால் நான் தாக்கப்பட்டது வெகுவான அதிர்ச்சியைத் தந்தது. ஆண் எழுத்து, பெண் எழுத்து என்கிற பிரிவினைகளில் நிற்பதை நானும் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால், ஆண்களின் எழுத்துக்கு வைக்கப்படாத விமர்சனத்தைப் பெண் எழுத்துக்கு வைத்துவிடுகிறார்கள். ஆண்கள் மட்டும் மெஞ்ஞானத் தூண்டலில் எழுதுவது போன்றும் பெண்கள் தங்களின் வாழ்க்கையிலிருந்து மட்டும் எழுதுவது போன்றும் ஒரு அடையாளப்படுத்தலைப் பொதுவாக வைத்துவிடுகிறார்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT