Published : 14 Sep 2025 08:21 AM
Last Updated : 14 Sep 2025 08:21 AM
என் வாழ்க்கையில் மறக்க முடியாத பெண்மணி என் மாமியார் என்றால் பலரும் ஆச்சரியப்படக்கூடும். நான் ராஜபாளையத்தைச் சேர்ந்தவள். என் இரண்டாவது தாய்வீடாக பணகுடி, தளவாய்புரத்தை மாற்றியவர் என் மாமியார் சுந்தரி. பொங்கல், தீபாவளிக்குத் துணி எடுக்க என் மாமனாரிடம் இருந்து பணத்தை வாங்கி, மூத்த மருமகளான என்னிடம் கொடுத்து, பட்டியல் போட்டு, ஆளாளுக்கு நிதி ஒதுக்கி ஒரு நிதி அமைச்சர்போலச் செயல்படுவார். நிறம் சரியில்லை, ஒதுக்கிய நிதிக்குள் முடிக்கவில்லை என்கிற விமர்சனம் ஏதுமின்றி அப்படியே ஏற்றுக்கொள்ளும் பக்குவம் உடையவர். வீட்டில் உள்ள அனைவருக்கும் அவரவர் சக்திக்கேற்ப வேலை பங்கீடு செய்வதில் நிபுணர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT