Published : 07 Sep 2025 08:14 AM
Last Updated : 07 Sep 2025 08:14 AM
நான் இல்லத்தரசியாக இருந்த நாட்கள் அவை. கணவரின் ஊதியம் மட்டுமே குடும்பத்திற்கு வாழ்வாதாரம். பொதுச் செலவுகள் பலவற்றுக்கும் அதைத்தான் நம்பியிருந்தோம். அதில் இரண்டு பெண் பிள்ளைகளைப் படிக்கவைக்க வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தேன். என் படிப்புக்கேற்ற வேலையைப் பல இடங்களில் கேட்டுப் பார்த்தேன். பிள்ளைகள் சிறியவர்களாக இருந்ததால், அவர்களைப் பராமரித்துவிட்டுக் குடும்பத்தையும் கவனித்துக்கொள்கிற மாதிரியான வேலை எனக்குக் கிடைக்கவில்லை. பிறந்தநாளுக்குக்கூடப் பிள்ளைகளுக்கு வளையல், பாசி, பொட்டு என மிகச் சிறிய பொருட்களைக்கூட என்னால் வாங்கிக் கொடுக்க இயலாத சூழ்நிலை. அனைத்துக்கும் கணவரையே எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT