Published : 31 Aug 2025 10:18 AM
Last Updated : 31 Aug 2025 10:18 AM
‘நமக்குத் தொழில் கவிதை’ என்று கர்வத்தோடு மகாகவி பாரதி முழங்கலாம். ‘புத்தகம் என் மூச்சு’ என்று நான் சொன்னால் கர்வம் தொனிக்குமோ என அஞ்சுகிறேன். இன்றும் யார் வீட்டில் புத்தகத்தைப் பார்த்தாலும் ‘படித்துவிட்டுத் தரட்டுமா’ என நான் பரபரப்பது நிஜம். புத்தகங்கள் எனக்குச் சிறிய வயதிலேயே அறிமுகமாயின. வீட்டின் முதல் தளத்தில் இருந்த புத்தக அலமாரிதான் என் புகலிடம். கடைக்குட்டி என்பதால் நிறைய புத்தகங்களைக் காணும் வாய்ப்புக் கிடைத்தது. என் சகோதர்கள் வெளிநாட்டுக்குப் படிக்கச் சென்றபோது வாங்கிவந்த ஆங்கிலப் படக்கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. அதை வாசிக்கத் தெரியாதபோதும் புரட்டிப் பார்த்து மகிழ்ந்தது மறக்கவே இல்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT