Last Updated : 24 Aug, 2025 08:14 AM

 

Published : 24 Aug 2025 08:14 AM
Last Updated : 24 Aug 2025 08:14 AM

ப்ரீமியம்
ஏன் கௌசல்யாக்கள் நம் சமூகத்திற்குத் தேவை? | உரையாடும் மழைத்துளி 46

மேலூரில் நடந்த சதீஷ்குமாரின் ஆணவக் கொலையை நம் தமிழ்ச் சமூகத்தினர் எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. ராகவியின் தந்தைக்குத் தொடர்புடையவர்கள் விபத்து போல அவர்கள் மீது காரை மோதி கொலை செய்த பிறகு சதீஷின் சடலம் பிணவறையில் யாருமே பெற்றுக் கொள்ளாமல் இருப்பது எவ்வளவு துயரமானது. ஒருவருக்கு மரணம்கூடக் கண்ணியமானதாக இருக்க வேண்டும் இல்லையா? ஆனால், காதலித்த ஒரே ‘பாவத்திற்காக’ விபத்துபோல் நடந்த கொலையினால் ஒட்டுமொத்த சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட கொடூரம் வேறு எங்கேயுமே நடக்காது. அதைப் பற்றி எல்லாம் நாம் பெரிதும் கவலைப்படாமல் அரசியல் சூழலில் என்ன நடக்கிறது என்று கவலைப்படுகிறோம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x