Published : 27 Jul 2025 11:00 AM
Last Updated : 27 Jul 2025 11:00 AM
திருப்பூர் ரிதன்யா, திருவள்ளூர் பொன் னேரியைச் சேர்ந்த லோகேஷ்வரி, திருவண்ணாமலை கீழ்பெண் ணாத்தூர் உமாதேவி எனப் பெண்களின் தொடர் தற்கொலைகள் தமிழ்நாட்டை உலுக்கி உள்ளன. இவர்களுக்கு ஓர் ஒற்றுமை இருக்கிறது. இந்த மூன்று பெண்களும் திருமணமானவர்கள்; இவர்களது மரணம் திருமணம் - அது சார்ந்த பிரச்சினைகள் தொடர்பானது.
பெண்களின் தற்கொலை தொடர்பாக 2003 -2004இல் உலகச் சுகாதார நிறுவனத்தின் சார்பில் உலகம் முழுவதும் ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. தற்கொலைக்கு முயன்று மருத்துவனமனைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 340 பேரை அந்த ஆய்வுக்காகச் சந்தித்துப் பேசினேன். வெளிநாடுகளில் பெண்கள் திருமண உறவைப் பாதுகாப்பு அளிப்பதாகக் கருதும் நிலையில் இந்தியாவில் அப்படி அல்ல என்று இந்த ஆய்வின் முடிவில் தெரியவந்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT