Published : 06 Jul 2025 07:29 AM
Last Updated : 06 Jul 2025 07:29 AM
ரிதன்யா - இந்தப் பெண்ணின் பெயர்தான் கடந்த வாரம் முழுவதும் சமூக ஊடகங்களில் மிக அதிகமாகப் பேசப்பட்ட ஒரு பெயர். தற்கொலைக்கு முயன்று வாகனத்துக்குள் பிணமாகக் கிடந்தவரை மீட்டபோதுதான் அவருக்குத் திருமணமாகி இரண்டு மாதங்களே ஆகியிருக்கிற விஷயமும், திருமண வாழ்வில் வரதட்சணை வேண்டும் என்று அழுத்தம் கொடுத்ததால் தாங்க முடியாத துயரத்தினால் வாழ்வை முடித்துக்கொண்டதும் தெரியவந்தது. காரில் இருந்து அவரை மீட்பதற்குள் அவருடைய அம்மா கதறிய கதறல் நம் காதுகளில் காலம் முழுக்க ஒலித்துக்கொண்டிருக்கும் அவலக் குரல் என்றாலும், இப்படியான அவலக் குரல்கள் நமக்குப் புதியன அல்ல.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT