Published : 29 Jun 2025 07:11 AM
Last Updated : 29 Jun 2025 07:11 AM
எங்கள் பகுதியில் இளம் தம்பதி ஒரு வயது குழந்தையுடன் ஓலைவேய்ந்த சிறிய வீட்டில் வசித்துவந்தனர். இருவரும் பெற்றோரை இழந்து, ஆசிரமத்தில் வளர்ந்து பிறகு திருமணம் செய்துகொண்டனர். கணவர் முனியன், மனைவி தாரா இருவரும் 10ஆவது வரை மட்டுமே படித்திருந்தனர். அப்போது எங்கள் பகுதியில் மிகப்பெரிய அடுக்குமாடி குடியிருப்பைப் பெரிய கட்டிட கான்ட்ராக்டர் ஒருவர் கட்டிக்கொண்டு இருந்தார். அவரை அணுகிய இந்தத் தம்பதி, அவரிடம் தங்கள் வறுமை நிலையைக் கூறி தங்களுக்குக் காவலாளி வேலையைக் கொடுத்து, தங்கிக்கொள்ள இடமும் கொடுக்குமாறு கேட்டனர். கட்டிட கான்ட்ராக்டர் ஒப்புக்கொள்ள, கொட்டகையிலேயே தங்கி கட்டிட வேலைகளைக் கவனித்துக்கொண்டு இருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT