Published : 22 Jun 2025 07:55 AM
Last Updated : 22 Jun 2025 07:55 AM
எங்களுக்கு மிகவும் நெருக்கமான அவர் திருநெல்வேலியில் படித்த குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். புகுந்த வீடு தஞ்சை. அவருடைய கணவர், ‘ஷாப் கடை’ என்று பேச்சுவழக்கில் சொல்லப்படும் ‘ஜெனரல் மெர்ச்சன்ட்’ வியாபாரத்தை மிகச் சிறப்பாக நடத்திவந்தார். வீடும் நிலபுலனும் ஆள்படையும் நிரம்ப இருந்தன. அவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன். காலப்போக்கில் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே பிரிவினை ஏற்பட்டு, கையில் இருந்த எல்லாவற்றையும் இழந்து வந்தாரை வாழவைக்கும் சென்னைக்குக் குடும்பத்துடன் அவர் இடம்பெயர்ந்தார். சென்னைக்குச் சென்றால்தான் தன் பிள்ளைகளுக்கு வாழ்வு என்கிற பெரிய முடிவைக் கையில் ஒன்றும் இல்லாமல் மன தைரியத்துடன் எடுத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT