Published : 15 Jun 2025 08:10 AM
Last Updated : 15 Jun 2025 08:10 AM
பள்ளிப் பருவத்திலேயே புத்தக வாசிப்பைத் தொடங்கிவிட்டேன். எங்கள் வீட்டில் அப்போது சிறு நூலகமே இருந்தது. டாக்டர் மு.வரதராசனின் ‘நெஞ்சில் ஒரு முள்’ நூலில் இருந்துதான் வாசிப்பைத் தொடங்கினேன். அவரது ‘அகல் விளக்கு’ சாகித்ய அகாடமிக்குத் தேர்வாகும் முன்பே படித்து வியந்திருக்கிறேன். அவரது ‘கள்ளோ? காவியமோ?’, ‘கரித்துண்டு’, ‘தம்பிக்கு’ ஆகியவை மறக்க முடியாத நூல்கள். அதன் பின் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’, ‘சிவகாமியின் சபதம்’ ஆகியவை தமிழ் உள்ளவரை வாழும் நூல்கள். அவரைப் போலவே சரித்திரக் கதைகளை எழுதிய சாண்டில்யன் தனது வர்ணனைகளால் கவர்ந்தவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT