Published : 18 May 2025 09:10 AM
Last Updated : 18 May 2025 09:10 AM
கிராமத்துவாசியான அம்மாவுக்கு வெளி உலகம் தெரியாது. பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோதே திருமணம் ஆகிவிட்டது. 20 வயதுக்குள் மூன்று குழந்தைகளுக்குத் தாயாகிவிட்டார். பிறரிடம் பேசத் தெரியாத குணம். ஆனால், இப்போது எம்.ஏ, எம்.ஃபில், பி.எட்., முடித்துள்ளார். நகரில் அவர் முக்கியமான ஒரு நபர். பொதுவான சமூகப் பிரச்சினைகளில் முன் நின்று தீர்வு காண்பார். மொத்தத்தில் பாரதி கண்ட புரட்சிப் பெண். இவ்வளவு மாற்றத்தையும் அம்மாவுக்குள் கொண்டு வந்தது டாக்டர் எம்.எஸ். உதயமூர்த்தியும் எழுத்தாளர்கள் அனுராதா ரமணன், சிவசங்கரியும்தான். அம்மாவுக்குப் போட்டியாக நான் இன்று முனைவர் பட்டம் பெற்றுள்ளேன். மேடைப் பேச்சில், வானொலியில், பட்டிமன்றங்களில் பங்கேற்றுவருகிறேன். இவை அனைத்துக்கும் மேற்சொன்ன எழுத்தாளர்களே முக்கியக் காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT