Last Updated : 27 Apr, 2025 08:23 AM

 

Published : 27 Apr 2025 08:23 AM
Last Updated : 27 Apr 2025 08:23 AM

ப்ரீமியம்
இதுவும் உருப்படும் வழிதான் | உரையாடும் மழைத்துளி - 29

புத்தகம் வாசிக்கும் பழக்கம் மெல்ல மெல்ல அருகிவரக்கூடிய ஒரு சூழல் என்று இக்காலக்கட்டத்தை நாம் சொல்கிறோம். பெருகிவரும் கணினிப் பயன்பாடும் அதற்கு ஒரு முக்கியமான காரணம். அனைத்தையுமே காட்சிரீதியாகப் பார்க்க ஆரம்பித்த பிறகு வாசிக்கும் பழக்கம் என்பது குறைந்துவருகிறது. இது மனித மனம் சார்ந்த மாற்றம்.

புத்தகக் காதல்: சென்ற முறை நான் ரயிலில் பயணித்தபோது எனக்கு எதிரில் நடுத்தர வயதில் ஒரு பெண் புத்தகம் வாசித்துக்கொண்டிருந்த காட்சி மிக அழகான ஒரு காட்சியாக இருந்தது. அந்தப் பெண்ணுக்கு ரயிலில் தன்னைச் சுற்றி நடக்கும் எந்தப் பிரச்சினையிலும் ஈடுபாடு இல்லை. தான் வாசிக்கும் உலகம் குறித்து அவர் மிகவும் கவலைப்பட்டதாகத் தெரிந்தது. சில நேரம் அவர் உச்சு கொட்டிக்கொண்டார். அவர் வாசிக்கும் புத்தகத்தில் இருக்கும் உலகத்தில் வாழும் மனிதர்களை நினைத்துக் கவலைப் பட்டுக்கொண்டிருப்பது வெளிப்படையாக தெரிந்தது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x